×

சென்னையில் 5 வயது சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது

சென்னை: சென்னையில் 5 வயது சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யபட்டுள்ளனர். ஏற்கனவே வளர்ப்பு நாயின் உரிமையாளர் புகழேந்து கைது செய்யபட்ட நிலையில், அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேஸ்வரன் கைது செய்யபட்டுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல்பள்ளி சாலை பூங்கா காவலாளியின் 5 வயது மகளை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின. நேற்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தன்னுடைய 2 நாய்களுடன் பூங்கா சென்றுள்ளார். அந்த வளர்ப்பு நாய்கள் பூங்கா உள்ளே விளையாடி கொண்டிருந்த காவலாளி மகள் சுதக் ஷாவை 2 கடித்தது. நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

சிறுமி சுதக் ஷாவை 2 நாய்களும் கடித்தபோது உரிமையாளர் புகழேந்தி தடுக்காமல் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். ராட்வைலா நாய்கள் குறித்து பலமுறை காவல்துறையினர் எச்சரித்தும் உரிமையாளர் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வைலா இன நாய்களை வைத்திருந்ததாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  இதனை அடுத்து 3 பேரும் ஜாமினில் விடுவிக்கபட்டனர்.

The post சென்னையில் 5 வயது சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pugazendu ,Thanalakshmi ,Venkateswaran ,
× RELATED சென்னையில் சிறுமியை கடித்து குதறிய...